Menu Close

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வரும்முன் காப்போம்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…

புதியதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி அடுத்த 48 மணி நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது.

அம்மாவின் அரசு மாவட்ட ஆட்சி மற்றும் உள்ளாட்சி மூலமாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. நிகழ்வுகளை மிக ஜாக்கிரதையாக கூர்ந்து கவனித்து வருகிறோம்.

நம் கலசபாக்கம் தொகுதியில் உங்கள் ஒவ்வொருவரின் நலனும் பாதுகாப்பும் மிக முக்கியம். அதுவே என் நோக்கம்…

உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், நம் தொண்டர்களும் மக்கள் நலன் காக்கும் பணியில் அடுத்த 48 மணி நேரம் கவனத்துடன் ஈடுபடுவார்கள். அது சமயம் உங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக அவசியம்.

அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு விஷயத்தையும் நம்பவோ அதை பரப்பவோ வேண்டாம் என்று உங்கள் நலனில் அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.