Menu Close

நேற்றைய தினம் மிகுந்த மனநிறைவு கொடுத்த தினம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நேற்றைய தினம்
மிகுந்த மனநிறைவு
கொடுத்த தினம்…
நாள் முழுவதும்
ஆயிரக்கணக்கான
ஆசிரியர்களுடன் சந்திப்பு…
காலையில்
மேல் வில்வராயநல்லூர்
அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
ஆயிரக்கணக்கான
ஆசிரியர்களுடன்,
நம் மாவட்டத்திற்கு
புதிதாக வந்துள்ள
மாவட்ட ஆட்சியர்
உடன் சந்திப்பு…
மாலையில்
அனந்தபுரத்தில்
நூற்றுக்கணக்கான
ஆசிரியர்களுடன்…
ஒரு சமூகத்தில் மக்கள்
ஆசிரியர்களை
எந்தளவுக்கு
மதிக்கின்றார்களோ…
எப்படி போற்றி
பாதுகாக்கின்றார்களோ
அந்த அளவிற்கு
அந்த சமூகத்தின்
வளர்ச்சி இருக்கும்…
அன்பிற்குரிய மக்களே…
நீங்களும்
உங்கள் பிள்ளைகளும்
நம்மைப் படைத்த
இறைவனுக்கு நிகராக
ஆசிரியர் பெருமக்களை
ஒவ்வொரு நாளும்
போற்றி வணங்குவோம்…
ஆசிரியர்களே
நல்ல ஒரு சமூகத்தின்
நவீனகால சிற்பிகள்…
நல்லதொரு சமூகத்தை
உருவாக்குவதும்
உயர்வாக்குவதும்
ஆசிரியர்களே…
ஆசிரியர்கள் மதிக்கப்படும்
சமூகம் நிச்சயம்
வளர்ச்சியை நோக்கி
நகர்ந்துகொண்டே இருக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.