Menu Close

சமூக விடுதலையே அரசியல் விடுதலைக்கு வழி என்றார்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்று
தொகுதி முழுவதும்
பல இடங்களில்
அண்ணல் அம்பேத்கரின்
பிறந்த நாள் விழாவில்
கலந்து கொண்டேன்…

இது ஒரு சம்பிரதாய
பங்கேற்பாக இல்லாமல்
அண்ணல் அம்பேத்காரின்
எழுச்சிமிகு கருத்துக்கள்
என் எண்ண சிந்தனையில் கலந்து
என் இளைஞர் சமூகத்திற்காக
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது…

கற்பி…
ஒன்று சேர்…
புரட்சி செய் என்றார்…

சமூக விடுதலையே
அரசியல் விடுதலைக்கு
வழி என்றார்…

வரலாறு படிக்காமல்
வரலாறு படைக்க முடியாது என்கிறார்…

பெண்களின் வளர்ச்சியே
ஒரு சமூகத்தின் வளர்ச்சியை காட்டும் குறியீடு என்றார்…

அண்ணலின் பிறந்த தினத்தை
கொண்டாடுவதோடு
அவரின் கருத்துக்களையும்
என் இளைய சமூகம்
சிந்தனையில் கலந்து
செயலாக வெளிப்படுத்தி
நல் சமூகத்தை கட்டமைக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.