Menu Close

நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்… கற்பனைகள் செய்யுங்கள்.

இறைவன் தந்த அற்புதமான நமது வாழ்வில் கனவுகள் காண்பதற்கும் கற்பனை செய்வதற்கும் எந்த தகுதியும் தேவையில்லை.

இறைவன் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை.

எல்லோராலும் எல்லாவற்றையும் அடைய முடியும்.

நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்… கற்பனைகள் செய்யுங்கள்

உங்கள் கனவுகள் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும்.

கண்டிப்பாக நீங்கள் விரும்பியதை உங்களால் அடைய முடியும். நம்பிக்கையுடன் இருங்கள்.

அதை அடைவதற்காக விடாமல் முயற்சி செய்யுங்கள்.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்”
உங்கள் முயற்சிக்கான பலன் கண்டிப்பாக ஒருநாள் கிடைத்தே தீரும்.

இங்கு இறைவன் அனைத்தையும் அனைவருக்குமே சேர்த்தே படைத்துள்ளார்.

அதை பெறுவது நமது நம்பிக்கையிலும் முயற்சியிலுமே இருக்கிறது.

நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்.

உங்களால் முடியாதது எதுவும் இல்லை.
நம்புங்கள். நன்றாக வாழ்வீர்கள்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.