Menu Close

ஆரணி கூட்டுறவு நகர வங்கி நூற்றாண்டு விழா!

ஆரணி கூட்டுறவு நகர வங்கி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர் திரு சோவூர் S ராமச்சந்திரன், நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி மோகன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் வளர்ச்சியில் பங்கு கொண்ட முக்கிய நபர்கள் வங்கியின் மூத்த உறுப்பினர்கள், வங்கியில் கடன் பெற்று தவணை தவறாமல் செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கூட்டுறவு நகர வங்கி மூலமாக மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு கடன் பணிபுரியும் மகளிர், தொழில் முனைவோர் கடன், வீட்டு அடமான கடன் என மொத்தம் 170 பயனாளிகளுக்கு 2 கோடி மதிப்பிலான கடன் திட்டங்களை மாண்புமிகு அமைச்சர் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.