Menu Close

எலி மருந்து தேங்காய் தின்று சிகிக்சை பெறும் குழந்தைகளுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்

கலசப்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட பழங்கோயில் கிராமத்தில் இருளர் குடியிருப்பு உள்ளது, இந்த குடியிருப்பில் வசித்துவந்த ஏழு குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை எலி மருந்து சாப்பிட்டு கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ V.பன்னீர்செல்வம் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை மேற்கொண்டு வரும் ஏழு குழந்தைகளுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறி ஆர்லிக்ஸ், பழங்கள், ரூபாய் இரண்டாயிரம் ஆகியவைகளை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.