Menu Close

ஜமுனாமரத்தூரில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் பொதுக்கூட்டம்

ஜமுனாமரத்தூரில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் பொதுக்கூட்டம்,அமைச்சர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜமுனாமரத்தூரில் எம்.ஜி.ஆர்.104 பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன், அமைப்பு செயலாளர் வாலஜபாத் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக ஒன்றிய செயலாளர் வெள்ளையன் வரவேற்றார். அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். முடிவில் ஜீவாமூர்த்தி நன்றி கூறினார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்டகழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.