Menu Close

ஜவ்வாது மலைப்பகுதியில் விரைவில் சாமை பதப்படுத்தும் நிலையம் திறக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நம்பியம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்குக் கூட்டுறவு வங்கியின் தலைவர் சி.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் பங்கேற்று பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கினார்.

விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஜவ்வாது மலைப்பகுதியில் விரைவில் சாமை பதப்படுத்தும் நிலையம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.