Menu Close

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

திருவண்ணாமலையில் அரசின் 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதைத் மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி K.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பல்வேறு துறைகளின் சார்பில் 52 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்ட கட்டங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி காணொலியில் திறந்து வைத்தார்.

இதேபோல் பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை, பால்வளத் துறை ஆகியவற்றின் சார்பில் 19 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

உடன் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு க .சு கந்தசாமி IAS மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.