Menu Close

படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலயத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலயம் சுமார் 165 நாட்களாக COVID-19 காரணமாக கோவில் மூடப்பட்டது. மீண்டும் நேற்று (01.9.2020) திறக்கப்பட்ட கோவில், அறநிலை துறை சார்பாக பக்தர்களுக்கு செய்திருக்கும் ஏற்பாடுகளை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பொதுமக்கள் பயன்படுத்த சானிடைசர், முக-கவசம், கபசுர குடிநீர் ஆகிய உபகரணங்கள் வழங்கி, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தெர்மா ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையைக் கண்டறிந்தார்.

பின்னர் பக்தர்களிடம் பேசிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் “தற்போது இருக்கும் சூழ்நிலையில் காணிக்கைக்குப் பதில் சனிடைசர், முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவை வழங்கினால் கோவில் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும்” என கேட்டுக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.