Menu Close

புதுப்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு மாற்றுக் கட்சியின் நிர்வாகிகள் கழகத்தில் இணையும் நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தூசி K.மோகன் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுக் கட்சியினருக்கு சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு,V.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்புரை ஆற்றும் போது, பல வருடங்களாக 25 குடும்பங்களுக்குப் பட்டா வழங்காமல் உள்ளது, அதை கவனத்தில் கொண்டு உரிய அதிகாரிகளிடத்தில் ஆலோசனை செய்து விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் தேவைக்காக விரைவில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு மினி டேங்க்குகள் அமைக்கப்படும் குடிநீர் பற்றக்குறை உள்ள பகுதிகளில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.