Menu Close

குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி நிதியுதவியுடன், சுமார் 1.37 கோடியில் புதிய கூடுதல் வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமிபூஜை போடப்பட்டது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக து. செயலாளர், M.நளினி மனோகரன், கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, படவேடு அன்பு உள்ளிட்டோருடன் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.