Menu Close

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் கல்வி மாவட்டத்தில் உள்ள இரேணுகொண்டாபுரம், ஆனந்தபுரம், குப்பம் ஆகிய மூன்று மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 402 மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் திட்டத்தின் பகுதியாக ரூபாய் 13,62,000 மதிப்புள்ள மிதிவண்டிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு,வி, பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் போளூர் கல்வி மாவட்ட அலுவலர் திரு.ஆர்.கலைவாணி மற்றும் இதர கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Posted in திட்டங்கள்

Powered by J B Soft System, Chennai.