Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் திருமதி காத்தாயி (65) அவர்கள் நடக்க இயலாத நிலையில் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். 144 தடை உத்தரவின் காரணமாக தன்னுடைய மகள் எங்கும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை இல்லாததால் தங்களுக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி நமது கலசபாக்கம் ஊராட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்களின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் மூலம் இணையத்தின் வாயிலாகக் கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள், உடனடியாக பில்லூர் ஊராட்சி தலைவர் ஷண்முகப்பிரியா மூர்த்தி மற்றும் வென்றெடுப்போம் வா ஒருங்கிணைப்பாளர் திரு.அரவிந்தன் ஆகியோர் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டார் காத்தாயி சார்பாக அவரின் மகளிடம் அந்த நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.