Menu Close

கலசபாக்கம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம்: மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் வழங்கினார்

டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கும் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் பொங்கல் பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
பொங்கல் அன்று நடைபெற்ற  இவ்விழாவிற்கு  கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  உயர்திரு  வி. பன்னீர்செல்வம்  எம்எல்ஏ  அவர்கள்  தலைமை தாங்கினார். ஜே.பி சாப்ட் சிஸ்டம்  நிறுவனர்  திரு  ஜெ சம்பத் அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக  உயர்திரு  சி எம் ஆர்  மணிமொழியன்  மாவட்ட  காவல்துறை  துணை கண்காணிப்பாளர்(ப)  அவர்கள் போட்டி தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்த  நுணுக்கங்களை மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார்; முன்னதாக   தொழிலதிபர் திரு ஜெ. சம்பத் அவர்கள்  கருத்துக்களை வழங்கினார்.
கலைக்கல்லூரி பேராசிரியர் திரு சி ராஜேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஒருங்கிணைப்பாளர்  சமூக சேவகர் திரு என். அரிகிருஷ்ணன்  அவர்கள் செய்திருந்தார்.
Posted in திட்டங்கள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.