Menu Close

கண்ணமங்கலம் அருகே சிறப்பு மனு நீதி முகாம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் ஊராட்சியில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா, விவசாய கருவிகள், விதவை உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகைக்கான சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகளுக்குச் சைக்கிள்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 144 பேருக்கு வழங்கினார். முகாமில் உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள் என மொத்தம் 10 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமிற்கு ஆரணி கோட்டாச்சியர் திருமதி மைதிலி அவர்கள் தலைமை வகித்தார். மேலும் வட்டாச்சியர் திரு ஜெயவேல், வீட்டு வசதி வரியா துணைத்தலைவர் திரு பொய்யாமொழி, ஊராட்சி தலைவர் திருமதி வளர்மதி அண்ணாமலை, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் திரு செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் திரு. கணபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.