Menu Close

தென்பள்ளிப்பட்டு சிறப்பு மனு நீதி முகாம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் 75 பயனாளிகளுக்கு 16.86 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பழங்கோவில்-பூண்டி இடையே பொதுமக்களின் நலன் கருதி செய்யாற்றின் குறுக்கே 5.40 கோடி மதிப்பீட்டில் நடைபாலம் கட்டும் பணி விரைவில் துவங்கும் என்றார்.

முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் திருமதி அன்பரசி ராஜசேகர் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் வட்டாட்சியர் திருமதி ராஜராஜேஸ்வரி, போளூர் வீட்டு வசதி வாரிய கடன் துணைத்தலைவர் திரு.பொய்யாமொழி வட்ட வழங்கல் அலுவலர் திரு சங்கர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு பாலசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் திருமதி தரணி பாண்டியன், மாவட்ட விநியோக அலுவலர் திரு ஹரிதாஸ், பிடிஓ திரு. அன்பழகன், வருவாய் ஆய்வாளர் திரு.சிவக்குமரன், கிராம அலுவலர் திரு.அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.