Menu Close

24 மணி நேரமும் அயராது மருத்துவ பணி செய்து வரும் மருத்துவர், செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலகை அசச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 24 மணி நேரமும் அயராது மருத்துவ பணி செய்து வரும் மருத்துவர், செவிலியர்களுக்கு அவர்களின் மருத்துவ சேவைக்காக அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, பாராட்டு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் கலசபாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கபாசுர குடிநீர், கிருமிநாசினிகள் வழங்கி அவர்களின் கண் இமைக்கா பணிகளுக்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

கலசபாக்கம் மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்த்தும் விதமாக மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி அறிவுரை கூறி அவர்களுக்கு கபாசுர குடிநீரை வழங்கினார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட வீரளூரில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

மேல்செண்பகாத்தோப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அங்கிருந்த வீடுகள் எரிந்து போயின. அவற்றை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.