Menu Close

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பங்கேற்றனர்.

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நம்மியம்பட்டு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அரசு மருத்துவ அலுவலர்களுடன் கொரோன தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நம்மியம்பட்டு ஊராட்சியில் கிருமி நாசினியை தெளித்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் இருக்கும் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினார்.

ஜமுனாமரத்தூர் மலைக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட காவல் சோதனை சாவடியில் காவலர்களுடன் கலந்துரையாடினர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.