Menu Close

மேல் வன்னியனூர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கினார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் ஒன்றியம், மேல் வன்னியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் கொரோனா கால நிவாரணமாக, மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.

அரசு கல்வித் துறை உயர்அதிகாரிகள், மற்றும் தலைமை ஆசிரியர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, திரு.லட்சுமணன் மற்றும் பூபாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.