Menu Close

கண்ணமங்கலம் அருகே சாலை சீரமைக்கும் பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார்

தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்ணமங்கலம் அருகே உள்ள பள்ளக்கொல்லையில் இருந்து இரும்புலி வரை உள்ள 3 கிலோமீட்டர் சாலையை ரூபாய் 63.11 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சாலை சீரமைக்கும் பணியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய துணைத் தலைவர் பொய்யாமொழி, மேலாண் இயக்குனர் ஜனார்த்தனன், ஊராட்சி தலைவர் வளர்மதி அண்ணாமலை, துணைத்தலைவர் பழனி, ஊராட்சி உறுப்பினர்கள் வீரமணி, ராஜபாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.