Menu Close

மேல் வில்வராயநல்லூரில் 22லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூரில் வேளாண்மைதுறையின் மூலம் விவசாய கருவிகள் சுமார் 22 லட்சம் மதிப்பில் 10 விவசாய பெருமக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “அட்சய பாத்திரம்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு விவசாய பெருமக்களுக்கு சுமார் 22 லட்சம் மதிப்பிலான விவசாய கருவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள், கழக பொதுக்குழு உறுப்பினர் P. பொய்யாமொழி அவர்கள், மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி P. நிலவழகி பொய்யாமொழி அவர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், சாதனைகள், திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.