Menu Close

கலசபாக்கம் ஒன்றியத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியதில் இன்று கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்கள் என சுமார் 500 குடும்பங்களுக்கு சமையலுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து கொரோனா நிவாரணமாக வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.