Menu Close

கலசபாக்கம் தொகுதியில் கொரானா நோய் தடுப்பு உபகரணங்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எர்ணாமங்கலம் ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா தடுப்பு நடவாடிக்கையாக சானிடைசர் முக கவசம் மற்றும் சோப்பு வழங்கும் நிகழ்ச்சியின் துவக்கவிழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்த கொரோனா தடுப்பு நடவாடிக்கைகாக சானிடைசர், முக கவசம், மற்றும் சோப்பு ஆகியவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சு.சீனுவாசன் MA.DTEd, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திமலை (தெ) கலசப்பாக்கம் அவர்களும் கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.