Menu Close

பட்டியந்தல் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பட்டியந்தல் ஊராட்சியில் கொரோனா நிவாரணம் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், நெசவு தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ்யுள்ள குடும்பங்கள் என சுமார் 210 ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சமையலுக்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருட்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.