Menu Close

சொந்த நிதியில் இருந்து 5,00,000 ரூபாய்க்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியில், கொரானோ வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியில் தொகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி ரூபாய் 5,00,000 மதிப்பீட்டில் மருந்து தெளிப்பான்கள், கிருமிநாசினிகள், முகக் கவசங்கள் கை உரைகள் போன்றவைகளை தொகுதியில் உள்ள காரப்பட்டு, கடலாடி, ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம் ஆகிய வட்டார மருத்துவமனைகளுக்கும் மற்றும் புதுப்பாளையம், கலசப்பாக்கம் ஆகிய வட்டார வளர்ச்சி மையங்களுக்கு வழங்கினார்.

மேலும் கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், கடலாடி, புதுப்பாளையம் ஆகிய காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கும், மேலும் பத்திரிகையாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கை பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி வைய அலுவலர்கள் பங்கேற்று பெற்றுக்கொண்டனர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.