Menu Close

கலசபாக்கம் தொகுதி வீரளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கடலாடி ஊராட்சியில் உள்ள மதுர மாம்பாக்கம் பகுதியில் வாழும் மக்களில் 10 பேருக்கு நேற்று முன்தினம் தீடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வீரளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் மேல்சிகைச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை அறிந்து வீரளூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்றார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்களிடம் ஆலோசனையும் மேற்கொண்டார். பிறகு அப்பகுதியில் கடலாடி ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போடுதல் போன்ற துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வீரளூர் பகுதியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசங்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.