Menu Close

புதுப்பாளையத்தில் அம்மா குளத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

புதுப்பாளையம் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் புதுப்பாளையத்தில் உள்ள அம்மா குளத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அம்மா குளத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் புதுப்பாளையம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வைக்கப்படும் என்று கூறினார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.