Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் மாற்றுதிறனாளியான திருமதி இ.தேவகி (50) அவர்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் வசித்து வருகிறார். அவர் அரசு முதியோர் உதவித்தொகை மட்டுமே பெற்று வாழ்ந்து வருகிறார். 144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்கு செல்லும் சூழ்நிலை இல்லாததால் நிவாரண உதவி கோரி நமது கலசபாக்கம் ஊராட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்களின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் மூலம் இணையத்தின் வாயிலாகக் கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள், உடனடியாக பில்லூர் ஊராட்சி தலைவர் ஷண்முகப்பிரியா மூர்த்தி மற்றும் வென்றெடுப்போம் வா ஒருங்கிணைப்பாளர் திரு.அரவிந்தன் ஆகியோர் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.