Menu Close

ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பூஜை செய்து இனிப்புகள் வழங்கி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில், கழக பொதுக்குழு உறுப்பினர் P. பொய்யாமொழி அவர்கள், ஜமுனாமரத்தூர் ஒன்றிய கழக செயலாளர் N. வெள்ளைய்யன் அவர்கள், நம்மியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், போளூர் பகாரா பழனி அவர்கள், ஜமுனாமரத்தூர் ஒன்றிய சேர்மேன் ஜீவா மூர்த்தி அவர்கள், மாவட்ட கவுன்சிலர், செல்லன், மணி, ராமமூர்த்தி அவர்கள், EX சேர்மேன் T.ஜெயராமன் அவர்கள், ஒன்றிய கழக அவைத்தலைவர் M.கருணாமூர்த்தி அவர்கள், பூண்டி ஜீவா, வன்னியனூர் லட்சுமணன் அவர்கள், சு.சீனுவாசன் MA. DTEd., மாவட்ட இணை செயலாளர் திருவண்ணாமலை (தெ) மாவட்ட மாணவரணி கலசப்பாக்கம், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.