Menu Close

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் அமமுக கழக உறுப்பினர்கள் அதிமுக-வில் இணைந்தனர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம் தென்மாதிமங்கலம், கோயில்மாதிமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த அ.ம.மு.க. மு. ஒன்றிய செயலாளர் திரு.வெங்கடேசன், அவர்கள், கார்த்தி ஒன்றிய அம்மா பேரவை, செயலாளர், துரை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர், ராஜாராம் கிளை செயலாளர், பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகியோர், அ.ம.மு.க-வில் இருந்து விலகி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்டச் செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் முன்னிலையில் தங்களைத் தாய்க் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

அவர்களை இன்முகத்தோடு வரவேற்று கட்சி வேட்டி அணிவித்து தாயுள்ளத்தோடு கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.