Menu Close

செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் ஆய்வு

2007ஆம் ஆண்டு படவேடு அருகே கட்டிமுடிக்கப்பட்ட செண்பகத்தோப்பு அணையின் ஷெட்டர்கள் சீரமைக்கும் பணிகளுக்காக தமிழக அரசு 16.37 கோடி ஒதுக்கீடு செய்தது. ஷெட்டர்கள் சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் துவங்கிய நிலையில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் செண்பகத்தோப்பு அணையின் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி இயக்குனர் திரு. சிவக்குமார், வீட்டு வசதி வாரிய துணைத்தலைவர் திரு. பொய்யாமொழி, ஊராட்சி தலைவர்கள் சீனிவாசன், அண்ணாமலை, விவசாய சங்க தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.