Menu Close

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று ஆசிரியர் தினம்…

ஆசிரியர்களுக்கு
நன்றி சொல்ல ஒரு தினம்…

மருத்துவர்களும்…
பொறியாளர்களும்…
அனைத்து துறை வல்லுநர்களும்…
நல் காவல் அதிகாரிகளும்…
பல்துறை தலைவர்களும்…
உருவாவது நல் ஆசிரியர்களாலேயே…

ஆசிரியர்கள்…
நல் சமூகத்தின்
நவீனகால சிற்பிகள்…

தன் உயரத்தையும் தாண்டி
மற்றவர்களை உயர்த்திவிடும்
சமூகத்தின் ஏணி அவர்கள்…

இப்படி இந்த சமூகத்தை
உருவாக்குவதும்
உயர்வாக்குவதும் ஆசிரியர்களே…

படைத்தவனின் படைப்பு
முழுமை பெறுவது
ஆசிரியர்களாலேயே…

எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்…

இறைவனுக்கு ஒப்பான
ஆசிரியப் பெருமக்களை
வணங்கி, பாராட்டி
நன்றி கூறி மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.