Menu Close

காலை வணக்கம்

எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.

சிந்தனைச் சிதறல்
கவலையே இல்லாத மனிதன் ஒருவனை நாம் பார்த்துவிட்டால, நாம் கவலைபடுவதில் அர்த்தம் உண்டு._
எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி._
அவனைவிட எனக்கு குறைவாகத்தானே இருக்கிறது._
எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.
கவலை என்ற கல்லை கண்ணுக்கு முன்பு வைத்தால் அது பெரிதாக தெரியும். மிக அருகில் வைத்தால் அது கண்ணையே மறைத்து விடும்.
அதை உங்கள் கண்ணுக்கு தெரியாதவாறு கீழே போட்டு விடுங்கள் அது காணாமல் போய்விடும்.

உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால்
இணைத்து கொண்டோம்!
முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!
அவரவர் கருத்துக்களை தெரிவித்துக் கொள்வோம்!
பாரட்டுக்களைபரிமாறி கொள்வோம் !
சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்!
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!
கவலைகளைகிள்ளி எறிவோம்!
இலட்சியங்களில் மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து‌
சாதிப்போம்…!

மனிதனுக்கு அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.

பணத்திலேயே குறியாக இருக்கும்
மனிதனுக்கு அன்பையே
அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.
எந்த மிருகமும் அன்பை பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை. மனிதனைத் தவிர.
யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை. யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.
நீங்கள் எப்போது உயர்ந்தவர் ஆகுகிறீர்கள் என்றால், உங்களை விட சிறியவர் என்றாலும், மரியாதையோடு அவர்களுடன் பழகும் போது தான்.

முதல் நாள் மலர்ந்த பூக்களை.. உதிர்த்துவிட்டு,

முதல் நாள் மலர்ந்த பூக்களை..
உதிர்த்துவிட்டு,
புதிய பூக்களுடன்.
அதிகாலையை
ஆனந்தத்துடன்.
செடி கூட ஆரம்பிக்கும்.
நாம் மட்டும் ஏன்??தேவை. இல்லாத
நேற்றைய ஆணிகளுடன்???
அனைத்தையும் புடுங்கி எறிந்து,
புத்துணர்வுடன் அதிகாலையை..
ஆரம்பிக்கலாமே..

நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.

உங்கள் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூதாதையரின் புகைப்படங்களைப் பாருங்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள் என்று.அவர்கள் சென்ற பின் உங்கள் தினசரி
வேலைகளில் எது நின்று போனது என்று.
நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.
சிலவற்றை தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்பாய். பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாய் இருப்பாய்.

வெறுத்தவர்களுக்கு நன்றி.. உங்களால் நேசிப்பை குறைத்துக் கொண்டேன்..

பிரிந்தவர்களுக்கு நன்றி.. உங்களால் தனிமையை பழகிக் கொண்டேன்..
வெறுத்தவர்களுக்கு நன்றி.. உங்களால் நேசிப்பை குறைத்துக் கொண்டேன்..
ஏமாற்றிவர்களுக்கு நன்றி.. உங்களால் எதிர்பார்ப்பை விட்டு விட்டேன்..
பழித்தவர்களுக்கு நன்றி.. உங்களால் என் பலவீனத்தை உணர்ந்து கொண்டேன்..
இன்னும் என்னோடு இருக்கும் அத்தனை உறவுகளுக்கும் நன்றி..
நீங்களும் என் வாழ்வில் ஏதோ ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கத்தான் போகிறீர்கள்.
மகிழ்வித்து மகிழ்

உங்களைப் போல் ஒருவரை காண்பது முடியாத ஒன்று.

உங்களைப் போல் ஒருவரை காண்பது முடியாத ஒன்று.
இருந்தும் நீங்கள் ஏன் வேறு ஒருவரைப் போல் வாழ நினைக்கிறீர்கள்..?
அடுத்தவர் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரம் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்காக செலவிட்டுப் பாருங்கள் அவர்களை விட நீங்கள் உயர்ந்து நிற்பீர்கள்.
நீங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் செயல் உங்கள் எதிர் காலத்தை கட்டமைத்துக் கொண்டுள்ளது என்பதை மறவாதீர்கள்.
இருந்துவிட்டு போவதல்ல வாழ்க்கை
உங்கள் பெயரைச் சில காலமாவது இருக்கச் செய்துவிட்டு செல்வதே
நல்ல வாழ்க்கை.

நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..

இறைவன் தரும் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக எண்ணுங்கள்.
இன்றைய நாளை மிகச் சிறப்பாக மாற்ற
நேர்மறையான எண்ணங்களோடும்‌,
தெய்வங்களின் அருளோடும் துவங்குங்கள்.
நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..
கண்டிப்பாக நல்லது மட்டுமே நடக்கும்.
நேர்மறை எண்ணங்களுடன் கூடிய நம்பிக்கை வானத்தையும் வசப்படுத்தும்.
நமக்கு தேவையான அனைத்தையும் நம்மை அடைய வைக்கும்.
வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பது தான்.
காரணமின்றி மகிழ்ச்சியாய் இருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
உங்கள் வாழ்வில் உங்களுக்கு தேவையான
நிறைவான ஆரோக்கியம்
நீண்ட ஆயுள்
நிறைந்த செல்வம்
அனைத்தும் பெற்று
உங்கள் உள்ளமும் இல்லமும் மகிழ்ச்சியால் நிறைந்து
சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும் வேண்டாம்.

சிலரிடம் கேட்க முடியாத கேள்விகளும், பலரிடம் சொல்ல முடியாத பதில்களும் பல உள்ளங்களை
உருத்திக்கொண்டுதான் இருக்கின்றன அவரவர் வாழ்க்கையில்.

பிறர் மீதான வெறுப்பு அதிகரிக்கும்போது உங்களது
நற்பண்புகள் சிதைக்கப்படுகின்றன உங்களையறியாமலேயே.

உங்களை புரிந்துகொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால் போராடுவதை விட மௌனமாய் கடந்து போவது மேல்.

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும்
வேண்டாம்.

மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.

உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, சற்றே விலக்கி வைத்து, மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.
இறைவனை நினைத்து வேண்டும்போது உங்கள் மனதை நிதானமாக யோசித்து செயல்பட வைக்கும். அதுவே உங்களை சுலபமாக நல்வழிக்கு கொண்டு செல்லும்.
மனம் ஒருவருக்கு அடங்குமே ஆனால் அவரால் முடியாது என்று எதுவும் இவ்வுலகில் இல்லை. அத்தகைய மனதை அடக்கி ஆளும் வித்தையை இறைவனிடம் வேண்டி செய்யும் பிரார்த்தனையால் அடையலாம்.

உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.

சிந்தனையில் சில வரிகள்…..
கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைய முடியாது !
கண் திறக்காத, சிறிய குஞ்சு கூட, வழியே இல்லாத ஓட்டை உடைத்து
கொண்டு வெளியே வரும் போது,
வழிகள் நிறைந்த, இந்த உலகத்தில், விழியிருந்தும் வழி தெரியாமல், ஏன் ? விழிக்கிறீர்கள் ?
எதைக் கண்டும் அஞ்சாமல், இருக்கின்ற நிலையில், இருப்பதை வைத்து துணிச்சலோடு செயலாற்றுங்கள்.
உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்.
ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல
முடியாது…

பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களை விட்டு விலகிச் செல்பவர்களைப்பற்றி கவலைப் படாதீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை.
இரயில்கள் போன பின் தண்டவாளங்கள் வெறிச்சோடி போகலாம், ஆனால் தண்டவாளங்களைத் தேடி ரயில்கள் மீண்டும் வந்து தான் ஆகவேண்டும்.
நினைத்தது உடனே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். தாமதமாக கிடைக்கும் யாவும் தரமானதாக தான் இருக்கும்.
பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.
சில நேரங்களில், சில இடங்களில் பார்வையாளராக இருங்கள் அதுவே
சிறந்தது.

அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..

முன்னேற விரும்பினால் முன்னேறிக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து இருங்கள்….
அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..
செல்வந்தனாக வேண்டுமென்றால் செல்வத்தை சேர்த்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள்.
நீங்கள் யாராக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அத்தகைய குணங்களை கொண்டவருடன் சேர்ந்து இருங்கள் வெற்றி நிச்சயம்.

வாய்ப்புகளும், வெற்றிகளும் தானே வந்து சேரும்;

ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கும் பொழுது…
பழைய தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்;
நீங்கள் தேடும் அனைத்தும் உங்களுக்குள் தான் இருக்கிறது…
நீங்கள் நாடும் விதத்தில் அது செயல்படும்;
காற்றை அழைக்க முடியாது…
ஆனால் கதவுகளை திறந்து வைக்கலாம்;
வாய்ப்புகளும், வெற்றிகளும் அப்படித்தான்…
முயற்சித்துக்கொண்டே இருங்கள்…
வாய்ப்புகளும், வெற்றிகளும் தானே வந்து சேரும்;

உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்.. உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

Powered by J B Soft System, Chennai.