Menu Close

“நிவர் புயல்” : சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஆற்றல்மிகு ஆளுமையான மாண்புமிகு நமது முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் சீரிய திட்டமிடல் படி நமது அம்மாவின் அரசு நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது…

நம் தொகுதியிலும் இன்று அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மக்களின் நலனும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

நம் மக்களின் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டு துணை நிற்கும் அத்துணை அரசு அலுவலர்களையும் நன்றியுடன் பாராட்டுகிறேன்…

மக்கள் அனைவரும் தக்க கவனத்துடன் இருந்து உங்களுக்காக உழைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வணங்கி கேட்டுக்கொள்கிறேன்…

எந்தவித பெரிய சேதமும் இன்றி நிவர் புயலும் கடந்து போகும் என்று நம்புவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.