Menu Close

தானும், தன் பெண்டிரும், மக்களும் மகிழ்வுடன் இருக்க…

நேற்று முழுவதும்
தொண்டர்களுக்கு
வழங்கிய பொங்கல் பரிசையும்…

கடந்த சில நாட்களாக
பொதுமக்களுக்கு வழங்கி வரும்
பொங்கல் பரிசு தொகுப்பையும்
மகாபாரத கர்ணன் கண்டிருந்தால்
கண்ணீர் மல்க ஆரத்தழுவி
பாராட்டி இருப்பான்…

இது தேர்தலுக்கான
அரசியல் என்பார் சில பேர்…

தானும்,
தன் பெண்டிரும்,
மக்களும்
மகிழ்வுடன் இருக்க..

விசித்திர பொருளாதாரக் கோட்பாடு பேசி
பரிசும் இலவசமும் அவசியமில்லை
என்பார் சில பேர்…

வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெறுகிறது…

என் இலக்கெல்லாம்…

எம் மக்களின்…
வளம்…
வாழ்வாதாரம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…

சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என்னை இதயத்தில்
வைத்துக் கொண்டாடும்
உங்களுக்காக
என்றென்றும் என் பணியில்
இயங்கிக் கொண்டே இருப்பேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.