Menu Close

மறைந்தும் மறையாமல் நம் இதயங்களில் வாழும் அம்மாவை தொகுதி தாய்மார்களிடத்தில் காண்கிறேன்…

கடந்த சில நாட்களாக
தொகுதி முழுவதும்
பல பகுதிகளில்
பல இடங்களில்
எம் தாய்மார்களுடன் சந்திப்பு…

மறைந்தும்
மறையாமல்
நம் இதயங்களில் வாழும் அம்மாவை
தொகுதி தாய்மார்களிடத்தில் காண்கிறேன்…

தாய்மார்களின் துணிச்சலில்
அம்மாவின் தைரியத்தை காண்கிறேன்…

தாய்மார்களின் முக மலர்ச்சியில்
அம்மாவின் மகிழ்ச்சியை காண்கிறேன்…

என்ன தவம் செய்தேனோ
நான் இங்கு இவர்களை கண்டெடுக்க…

நேற்றைய நன்றி சொல்லும்
நிகழ்வில்
என் தாய்மார்கள் ஆனந்த கண்ணீருடன்
காட்டிய பாசத்தில் உள்ளம் குளிர்ந்து போனேன்…

அம்மா…
நீங்கள் என்னை இவர்களுக்கு
அடையாளம் காட்டினீர்கள்…

இவர்கள் என்னை எனக்கு
அடையாளம் காட்டி விட்டார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் தொகுதி தாய்மார்களின் நலன் காக்க என்றென்றும் என் பணி தொடரும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.