Menu Close

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும்

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும்
ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்,
குதூகலம், அழுகை, சிரிப்பு,
வேகம், விவேகம்,
போற்றுதல், தூற்றுதல்,
அன்பு, ஆனந்தம்,………
இப்படி அனைத்தும் கலந்த கலவையே வாழ்க்கை
இதுதான்
இப்படித்தான்
என்பது எதுவும் இல்லை
எது எப்படியோ…
அது அப்படித் தான்…
என்ற ஏற்புத்தன்மையே வாழ்வை வசந்தமாக்கும்
ஒருவருக்கு இது தான் சிறந்தது என்பது
வேறொருவருக்கு அப்படியே சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது
அவருக்கு வேறொன்று சிறப்பானதாக இருக்கலாம்
அது அவரை நல் வழிப்படுத்தி உயர்வுக்கு இட்டுச்செல்லலாம்
நமக்கு தெரிந்ததை
அது தான் சிறப்பு என்று மற்றவருக்கு திணிக்க முனையும் போது தான்
சிக்கல்களும் விரிசல்களும் உருவாகிறது
அனைத்தும் அனைவருக்கும் அறிந்து கொள்ளும் காலம் நிச்சயம் இயற்கை கொடுக்கும்
ஆக…
அனைத்தையும் ஏற்று ஆனந்தமாக வாழ்வோம்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.