Menu Close

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் . உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார்.

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் .
உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார்.

இந்த நாளை முழுமையாக அற்புதமான நாளாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது.
இன்றைய நாளை உங்களால் பார்க்க முடிகிறது.

இன்றைய நாளில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் வழங்கியுள்ளார்.
இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து
” நான் கொடுத்து வைத்தவர்” என்பதை முதலில் நம்புங்கள்.

உங்களிடம் இல்லாத ஒன்றை தேடித்தேடி கவலைப்படாமல்
இருக்கும் அனைத்திற்கும் முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல பேரின் பல நாள் கனவுகளாக இருக்கலாம்.
உங்களது மகிழ்ச்சி முழுமையாக உங்கள் கைகளில்தான் உள்ளது.
அதை வெளியே தேடாதீர்கள்.

மகிழ்ச்சியான உள்ளமே இறைவன் வாழும் கோவில்.
உங்களுக்குள் நிறைந்துள்ள இறைவனை போல மகிழ்ச்சியும் உங்களுக்குள் நிறைந்துள்ளது.

அதை உணரும் பொழுது உங்கள் வாழ்க்கை இன்பமயம் ஆகும்.
வாழ்வில் எதற்கும் சோர்ந்து விடாதீர்கள்.
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இறைவன் உங்களுடன் சேர்ந்து உங்களை வழி நடத்திச் செல்கிறார்.

உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இந்த நிமிடம் இதை உங்களால் உணர முடிகின்றது.
நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகும்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.