Menu Close

மாற்ற முடிந்ததை மாற்றுங்கள். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

இறைவன் தந்த இந்த அழகிய வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம்.

அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

சில நேரங்களில் மற்றவர்களை மாற்ற முயற்சிக்காமல்
நம் எண்ணங்களை மட்டும் சரி செய்தால் போதும் நம் வாழ்க்கையே சரியாவதை உணர முடியும்.
பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தானே கிடைக்கும் .

ஏனென்றால் அங்கு பிரச்சனையே நமது தேவையற்ற சிந்தனைகளும் குழப்பங்களுமாகத்தான் இருக்கும்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையும் அழகாக மாறுவதை உணர்வீர்கள்.

மாற்ற முடிந்ததை மாற்றுங்கள்.
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

திருப்தியான நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக உணர்வீர்கள்.
இது இறைவன் தந்த வாழ்க்கை.

அவர் பார்த்துக் கொள்வார்.
தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்திற்குள் சிக்கி உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே .
வாழ்ந்து பார்த்து விடுங்கள்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.