Menu Close

உங்களை நம்புங்கள். உங்களை கருவாக்கி…. உருவாக்கி… காத்து வழிநடத்தி கொண்டிருக்கும் இறைவனை நம்புங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை தேடுகிறோமோ அது நம்மை நோக்கி பயணிக்க தொடங்குகிறது.

ஆனாலும் அது நம்மை வந்து அடைவது,
நாம் அதன் மீது கொள்ளும் நம்பிக்கையிலும் உறுதியிலும் தான் இருக்கிறது .

அதிகமாக நம்புங்கள்.
நமக்கு வேண்டியது நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாக நம்புங்கள்.

அந்த உறுதி உங்களுக்கு இடையேயான ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

அந்த ஈர்ப்பு சக்தியின் விளைவாக நீங்கள் விரும்பியது எங்கிருந்தாலும் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

நம்பிக்கை தான் அனைத்தையும் நம் கையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கான அற்புதமான மந்திரம்.
நம்புங்கள்.

உங்களை நம்புங்கள்.
உங்களை கருவாக்கி…. உருவாக்கி… காத்து வழிநடத்தி கொண்டிருக்கும் இறைவனை நம்புங்கள்.

இறை அருளுடன்
முழுமையாக நம்பி முயற்சித்தால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

இறை பேராற்றலின் அருளால் நிச்சயமாக உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.