Menu Close

சில நேரங்களில் சில காரணங்கள் புரியாமல் இருப்பதே நல்லது. இறை சக்தியை முழுமையாக நம்புங்கள்

இறைவன் தந்த நம் வாழ்க்கையில் அவரைத் தவிர வேறு யாராலும் நமக்கு சிறப்பாக வழி காட்ட முடியாது.

எல்லா நேரங்களிலும் நம் வாழ்வில் என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

சில நேரங்களில் சில காரணங்கள் புரியாமல் இருப்பதே நல்லது.
இறை சக்தியை முழுமையாக நம்புங்கள்.

இறைவன் எப்பொழுதும் தவறும் செய்வதில்லை.
தாமதமாக வருவதும் இல்லை.
நாம் தான் அவசரப்படுகிறோம்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்கு எதுவும் தெரியாது.

முக்காலமும் உணர்ந்தவர் நம் வாழ்வை சிறப்பாக வழிநடத்துவார்.

சரியான நேரத்தில் சரியான இடத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவார்.
முழுமையாக நம்புங்கள் .

இறைவனை நம்பி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

உங்களுக்கு என்று உள்ளது நிச்சயம் உங்களை தேடிவரும்.
அதை யாராலும் தடுக்க முடியாது.

இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.