Menu Close

சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம். வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.

வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு பயணங்கள் வேறு.

சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.

சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம்.
வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.

வலிகளை அனுபவித்த நாட்களே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். உங்கள் வலிகளுக்கான பல மடங்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள் உங்களுக்காக இறைவன் ஒரு புது வழியையே உருவாக்கலாம்.

உங்களுக்கான பாதைகள் உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

ஆகவே பாதைகள் எப்படி இருந்தாலும் இறைவனை நம்பி பயணத்தை தொடருங்கள்.

உங்கள் பயணங்கள் நிச்சயமாக சிறப்பாக இருக்கும்.
இன்று நீங்கள் படும் கஷ்டங்களை வைத்து நாளை உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள்.

பிரபஞ்சம் எந்த நேரத்திலும் யாருடைய வாழ்விலும் எத்துணை பெரிய அதிசயத்தையும் நிகழ்த்தலாம் .
நாம் அதை வரவேற்க தயாராக இருந்தால் மட்டும் போதும்.
நேர்மறையான சிந்தனைகளோடும் நம்பிக்கையோடும் இருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.