Menu Close

கண் மூடினால் தெரியும் கனவுகளை கூட நிஜமென்று நம்பும் கண்கள்…!

நிஜங்களுக்கும்,
நிழல்களுக்குமிடையே
நிலைதடுமாறும்
வயது..!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்கு
மிடையே
சஞ்சலப்படும் மனது…!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும்
மனிதர்கள்…!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும்
உலகம்..!
விரல்பிடித்து
நடப்பதாய்
விளக்கம்
சொல்லிவிட்டு
விலகிச் செல்லும்
சிலர்…!
கண் மூடினால்
தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும்
கண்கள்…!
முயன்றாலும்
கிடைக்காததை
முழுமுயற்சியோடு
தேடும் முட்டாள்தனமான
சில தேடல்கள்…!
சந்தோஷங்களை
பறித்துவிட்டு
கண்ணீரை மட்டும்
தரும் காலச்சக்கரம்…!
இதுதான் வாழ்க்கை
என்றில்லை…!
இவ்வளவுதான்
வாழ்க்கை…!!!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.