Menu Close

உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி உலகத்தை உறுதியோடு பாருங்கள்…

உங்களால் முடியாதென்று நீங்களே நினைத்து மூலையிலே முடங்கிக் கிடக்காதீர்கள்.
தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்..
உறங்கும் விதை விழிக்கும் வரை…
உறையிட்ட வெற்றுப் பொருள் தான்…
உறங்கும் மனிதா நீங்கள் அப்படித் தான்….
உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி…
உலகத்தை உறுதியோடு பாருங்கள்…
வானம் ஒன்று…
வாழ்க்கையும் ஒன்று…
இதில் யாருக்கும் வேறுபாடில்லை.
ஒர் சாண் வயிற்றுக்கு மேலே எதுவும் நிரம்புவதில்லை….
தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள்….
தடைகளை உடைத்திடுங்கள்…
தோல்விகளைப் படிக்கட்டாக்கி
வெற்றிக் கோட்டையை வென்றிடுங்கள்!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.