Menu Close

உயிருக்காக மட்டும் அழுது புலம்புகையில் சிரித்துக்கொள்கிறான் ஆண்டவன்.

சிரித்துக் கொள்கிறான் ஆண்டவன்…
எத்தனை கோழிகள்
எத்தனை ஆடுகள்
எத்தனை மாடுகள்
எத்தனை மீன்கள்
எண்ணிக்கையில்
தினம் தினம்
எத்தனை எத்தனை
கோடிகள்
ஊண் என்று
நாம் கொன்று
குவிக்கும் ஊன்கள்
அரக்கன் என்றோ
ராட்சசன் என்றோ
நாட்டுமிராண்டி என்றோ
புலம்பிக் கொண்டுதான்
இருக்கும்
விலங்குகளும்
பறவைகளும்
மனித
உயிருக்காக மட்டும்
அழுது புலம்புகையில்
சிரித்துக்கொள்கிறான்
ஆண்டவன்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.