Menu Close

நீங்கள் கேட்பது நல்லதாக இருந்தால் நிச்சயம் அது உங்களை தேடி வரும்.

இந்த பிரபஞ்சத்தையே படைத்து வழி நடத்தும் சக்தி மிகவும் பிரம்மாண்டமானது.
அது நம் வாழ்க்கையையும் சிறப்பாக வழி நடத்தும்.
சில நேரங்களில் நாம் கேட்பது அனைத்தும் உடனே கிடைக்கலாம்
சில நேரங்களில் கிடைப்பதற்கு தாமதமாகலாம்.
நாம் கேட்டது உடனே கிடைக்கவில்லை என்றால் இறைவனிடம் கோபித்துக் கொள்கிறோம்.
ஆனால் உண்மையில் நமக்கு வரும் எத்தனையோ ஆபத்துக்களில் இருந்து நமக்கே தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நம்மை காத்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம்.
நீங்கள் கேட்பது நல்லதாக இருந்தால் நிச்சயம் அது உங்களை தேடி வரும்.
நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!
நல்லதே நடக்கும்.
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.