Menu Close

மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றே.
ஆனால் அதை எந்த அளவுக்கு சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது..
சில நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளால் நமது வாழ்வின் அற்புதமான நாட்களை மகிழ்ச்சியாக வாழாமல் வீணாக்கி விடுகிறோம்.
உங்களை நீங்கள் முழுமையாக அன்பு செய்யும் பொழுது
மற்ற எதுவும் உங்களுக்கு கவலைகளை தராது.
மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்களை நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி முழுமையாக அன்பு செய்யுங்கள்!
மற்றவர்களுக்கு கிடைத்த அனைத்தும் நமக்கு கிடைக்கவில்லையே
என்று வருத்தப்படாதீர்கள்.
இறைவன் உங்களுக்காக அளித்ததை மன நிறைவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்கான சாவியை மற்றவர்கள் கைகளில் தராதீர்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் பொறுப்பு.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.