Menu Close

மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .

நம் வாழ்க்கைப் பயணத்தில் அனைவரது நோக்கமும்
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.
ஆனால் சிலர் மகிழ்ச்சியை வெளியே தேடுவதினால் அதை கடைசி வரை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .
அது வெளியில் தேடிக் கிடைப்பதில்லை.
இது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
அது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
என்று ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு இருக்காமல்…
வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர முயற்சி செய்யுங்கள்.
மகிழ்ச்சியான இதயங்களில் தான் இறைவன் குடி கொண்டுள்ளார்.
உங்களுக்குள் இறைவன் உள்ளார் என்பதை உணர்ந்தால் நிச்சயமாக மகிழ்ச்சியை மட்டும் தான் உள்ளே அனுமதிப்பீர்கள்.
துன்பங்களை தேடித்தேடி கவலைப்படாமல் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.