Menu Close

கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருமல், சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு என தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு செய்தார்.

அப்பொழுது வெளிமாவட்டங்களில் இருந்து வந்த எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? இருமல், சளி, காய்ச்சலால் எத்தனை நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்? கொரோனாவை தடுக்க தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா?  என டாக்டர்களிடம்  கேட்டறிந்தார். மேலும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் மற்றும் விடுதிகள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளதா? என கேட்டறிந்தார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.